ஒரு புள்ளியும் தோன்றாத கணத்தின் ஆரம்பம்,
ஒவ்வொரு புள்ளியும் தோன்றிய கணத்தின் முடிவு,
ஒளிபட்டதும் நிறம் மாறும் வண்ணங்களின் குணம்,
பகல் தந்தாலும் இரவில் மட்டும்
நிலவோடு உறவாடும் எண் பூமி கிரகம்,
தடை இல்லை என்றாலும்
கரை தாண்டாத தண்ணீர் கடல்,
மிக பெரிதென்றாலும் சிற்றுருவில் காட்டும்
எண் பூமிக்கும் வின்மீனுக்குமான தூரம்,
வீளும்போதேல்லாம் தூர பார்வைக்கு
தூண் போல் தெரியும் அருவி,
நீரோடு நீந்தாமல்
நீர் வரும் திசை நோக்கி நீந்தி செல்லும் மீன்கள்,
உணவையும் கூடலையும் தவிர
வேறேதும் தேடாத மனிதனில்லா உயிர்கள்,
பார்த்தும் பார்க்காதது போல்,
பேசினாலும் பேசாதது போல்,
பழக்கத்தில் பலகாதவரை போல்,
எல்லா பேசு பொருளையும் தானே பேசி விட்டு
என்னிடம் மட்டும் அமைதியை விரும்பும்
என்னருமை தோழிகள்,
கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும்
எண் தொலை தூர கனவு,
எழுத்துக்கள் இருந்தும் எழுத இயலா பொருளின்
எல்லா முரண்பாடுகளுக்குள்ளும் இருக்கிறது
என்னாத்மாவிர்கான முத்தம்.
Life is right in any case.... உங்கள் கவிதை அந்த வார்த்தைகளை நினைவு படுத்துகிறது....
ReplyDeleteI get more enthus by this kind of Comment...Thank u.
ReplyDelete