Wednesday, January 26, 2011

ஒரு வார்த்தைக்காக

இரு இமைகளும் இறுக்க மூடி கிடக்கிறது
ஒருங்கிணைந்த வர்ண கூட்டமொன்று
நரம்பு மண்டலங்களை தாக்குகிறது.
வர்ணசுமைகள் நரம்பில் ஏறி
நெற்றி புடைக்க பற்களை கடிக்கிறேன்.
என் சிரசின் இறுக்கத்தில்
கைவிரல்கள் மூடி கொள்கிறது.
என் குருதி , புக இடமின்றி
கண்களின் நரம்புகளைஆக்கிரமிக்கிறது.
என் நா சொல்லை மறந்து
தண்ணீருக்கு தவிக்கிறது.
இரண்டு கால்களையும்
இருக்க கட்டி விட்டது போல்
அசைய மறுக்கிறது.
உள்ளிருந்து ஒரே ஒரு
குரலுக்காக மட்டுமே
காத்திருக்கிறேன்.
வேறு யார் குரலும் அல்ல
என் குரல் தான்.
வேறு எந்த வார்த்தையும் அல்ல
"எழுந்திரு" என்ற ஒரு வார்த்தைகாகத்தான்.

2 comments:

  1. //ஒருங்கிணைந்த வர்ண கூட்டமொன்று
    நரம்பு மண்டலங்களை தாக்குகிறது.
    வர்ணசுமைகள் நரம்பில் ஏறி
    நெற்றி புடைக்க பற்களை கடிக்கிறேன்.//

    உங்கள் கனவுகள் கலராக வர துவங்கி விட்டது
    வாழ்துகள் அது மீண்டும் கறுப்பு வெள்ளையாக மாறுவதற்குள் எழுந்துவிடாதீர்....

    ReplyDelete
  2. ஒற்றைச் சொல் ஓங்காரத்திற்கு...காத்திருக்கும்..உயிரின் ரீங்காரம்.

    ReplyDelete