Wednesday, January 4, 2012

கால புதிர்களின் புன்னகையில்

கால புதிர்களின் புன்னகையில்
மறைந்திருக்கும் மர்மத்திற்கு
விடை காண்பதிலேயே
வாழ்க்கை விடை பெற்று விடுகிறது...

என்ன இருந்தாலும்
காலம் நகர்த்தும் காய்களுக்கு சற்று
வலிமை கூடுதலாக தான் இருக்கிறது..
மிக சிரத்தையுடன் நான் நகர்த்தும்
ஒரு நகர்த்தலுக்கு வில்லத்தனமாய்
ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு
முன்னிலும் வலுவாய் ஒரு நகர்த்தலை
காலம் நகர்த்தும் போது தான் எனக்கு உரைக்கிறது
நானும் விளையாடி கொண்டிருக்கிறேன் என்று....



1 comment:

  1. தீராத விளையாட்டுப் பிள்ளை..காலத்தைச் சொல்லுகிறேன்.

    ReplyDelete