Wednesday, January 4, 2012

கால புதிர்களின் புன்னகையில்

கால புதிர்களின் புன்னகையில்
மறைந்திருக்கும் மர்மத்திற்கு
விடை காண்பதிலேயே
வாழ்க்கை விடை பெற்று விடுகிறது...

என்ன இருந்தாலும்
காலம் நகர்த்தும் காய்களுக்கு சற்று
வலிமை கூடுதலாக தான் இருக்கிறது..
மிக சிரத்தையுடன் நான் நகர்த்தும்
ஒரு நகர்த்தலுக்கு வில்லத்தனமாய்
ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு
முன்னிலும் வலுவாய் ஒரு நகர்த்தலை
காலம் நகர்த்தும் போது தான் எனக்கு உரைக்கிறது
நானும் விளையாடி கொண்டிருக்கிறேன் என்று....



Tuesday, February 15, 2011

சொல்லாத காதல்.


கூடு தொலைத்த பறவையின்
பரிதவிப்பாய் திக்கி திணறுகிறது
யாரிடமும் சொல்லாத காதல்...

Monday, February 14, 2011

பிணத்தோடு ஒரு பயணம்

பிரிந்து போன உன்னை எதேச்சையாய்
ஒரு சாவு வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
பிணத்தின் அருகே அழுது கொண்டிருந்தாய்...
கண்ணீர் தேங்கிய கண்களுடன் எனை நீ பார்த்தபோது,
அழுவதற்கு தொடங்கிய எனது கண்கள்
கண்ணீரை கரை போட்டு தடுத்துவிட்டது...
அழாதே என்று நீ யாருக்கோ ஆறுதல் கூறியபோது,
மறந்தும் இங்கு கண்ணீரை கொட்டிவிடாதே என்று
எனது கண்களுக்கு கட்டளை போட்டுகொண்டிருந்தேன்...
கல்லறை செல்லும் காரிய வீட்டில்
மெல்ல புதைந்த உன் நினைவுகள் அனைத்தும்
தோண்டி எடுக்கப்பட்டது...
எல்லா சடங்குகளும் முடிந்து
பிணத்தின் கல்லறை பயணம் துவங்கியது...
இடுகாடு வர நீ தயங்கி நின்றாய்...
பிணத்தோடு நான் பயணம் போனேன்
முற்றும் நினைவுகளை புதைத்துவிடும் மனதோடு...

Wednesday, January 26, 2011

ஒரு வார்த்தைக்காக

இரு இமைகளும் இறுக்க மூடி கிடக்கிறது
ஒருங்கிணைந்த வர்ண கூட்டமொன்று
நரம்பு மண்டலங்களை தாக்குகிறது.
வர்ணசுமைகள் நரம்பில் ஏறி
நெற்றி புடைக்க பற்களை கடிக்கிறேன்.
என் சிரசின் இறுக்கத்தில்
கைவிரல்கள் மூடி கொள்கிறது.
என் குருதி , புக இடமின்றி
கண்களின் நரம்புகளைஆக்கிரமிக்கிறது.
என் நா சொல்லை மறந்து
தண்ணீருக்கு தவிக்கிறது.
இரண்டு கால்களையும்
இருக்க கட்டி விட்டது போல்
அசைய மறுக்கிறது.
உள்ளிருந்து ஒரே ஒரு
குரலுக்காக மட்டுமே
காத்திருக்கிறேன்.
வேறு யார் குரலும் அல்ல
என் குரல் தான்.
வேறு எந்த வார்த்தையும் அல்ல
"எழுந்திரு" என்ற ஒரு வார்த்தைகாகத்தான்.

Tuesday, January 25, 2011


உள்ளுக்குள் சேமித்த வாழ்க்கை நினைவுகளை

ஒருவருக்கேனும் சொல்ல காத்திருக்கும் பழைய வீடுகள்

முதுமை மனிதர்களை போலவே..

Sunday, December 26, 2010

தீ குடித்த வனம்.


கொடும் நெருப்பில் வேகும் என் பசுமை காடுகள்,
அதன் உள்ளிருந்து கேட்கும் உயிர்களின் அபய குரல்கள்,
அணைக்க தண்ணீர் தேடி ஒரு புறம்,
காப்பாற்றுவதற்கு ஓடி ஒரு புறம்,
பற்ற வைத்தவரை தேடி ஒரு புறம்,
எல்லாவித கரங்களை இழுத்தும்
உதவிக்கு ஒரு கரமும் வராத சோகம் ஒருபுறம்.
கொஞ்சம்போல் வாய்காலில் ஓடிய தண்ணீரை
நெஞ்சு மூச்சிரைக்க இறைத்து பார்த்தும்
என்னால் எறும்பை கூட காப்பாற்ற முடியாத
இயலாமை கோபம் ஒருபுறம்.

"யாரேனும் காப்பாற்ற வாருங்கள் "
என்று குரலெழுப்ப சென்றவனின் கழுத்தை
மாயக்கரமொன்று பற்றி நெரித்தது.
நெடுங்காலம் உரமேற்றி,
கொடுமிரும்பால் ஆழத்தோண்டி,
கணுக்கால் கடுக்க விதை விதைத்து,
கடுமிருளிலும் தண்ணீரூற்றி,
குறுக்கு நோக கலை எடுத்து வளர்த்த காடு
என் கண்முன்னே பாவி நெருப்பில் சாகிறதே..


"கடைசி கட்ட சாவில் இருக்கிறோம்
கரம் நீட்டுங்கள் என் தாய் தமிழ் மக்களே"என்ற குரலுக்கு,
வெளிநின்ற நான் சத்தமாய் கூறினேன்.
"என்னை அழைக்காதீர்கள்,

நான் சொகுசு வாழ்க்கைக்குள் சொக்கி போன தமிழன்,
இலவசம் பெற்றே மானமிழந்த மூடன்,
வண்ண பெட்டிக்குள் வடிவம் தொலைத்த பைத்தியக்காரன்,
நான் ஒரு அடிமை, எனக்கு கரமில்லை,
உங்களுக்காக குரல் எழுப்ப உரிமை இல்லை,
என்னால் இயலாது என்று.
ஆறரை கோடி தமிழன் மிச்சமிருந்தும்
அனாதைகளாய் செத்த இனம் நோக்கி ..



Saturday, December 25, 2010

ஆத்மாவின் முத்தம்



ஒரு புள்ளியும் தோன்றாத கணத்தின் ஆரம்பம்,

ஒவ்வொரு புள்ளியும் தோன்றிய கணத்தின் முடிவு,


ஒளிபட்டதும் நிறம் மாறும் வண்ணங்களின் குணம்,


பகல் தந்தாலும் இரவில் மட்டும்

நிலவோடு உறவாடும் எண் பூமி கிரகம்,


தடை இல்லை என்றாலும்

கரை தாண்டாத தண்ணீர் கடல்,


மிக பெரிதென்றாலும் சிற்றுருவில் காட்டும்

எண் பூமிக்கும் வின்மீனுக்குமான தூரம்,


வீளும்போதேல்லாம் தூர பார்வைக்கு

தூண் போல் தெரியும் அருவி,


நீரோடு நீந்தாமல்

நீர் வரும் திசை நோக்கி நீந்தி செல்லும் மீன்கள்,


உணவையும் கூடலையும் தவிர

வேறேதும் தேடாத மனிதனில்லா உயிர்கள்,


பார்த்தும் பார்க்காதது போல்,

பேசினாலும் பேசாதது போல்,

பழக்கத்தில் பலகாதவரை போல்,

எல்லா பேசு பொருளையும் தானே பேசி விட்டு

என்னிடம் மட்டும் அமைதியை விரும்பும்

என்னருமை தோழிகள்,


கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும்

எண் தொலை தூர கனவு,


எழுத்துக்கள் இருந்தும் எழுத இயலா பொருளின்

எல்லா முரண்பாடுகளுக்குள்ளும் இருக்கிறது

என்னாத்மாவிர்கான முத்தம்.